சங்கர லிங்கத்தின் சப்ரமஞ்சம் சாய்ந்தாள்
சந்தேகத் துடனெழுந்தாள்
சரியான உயர்பெருமை தன் கணவனுக்கா அன்றித்
திருமகள் மார்புறைவனுக்கா
எங்கறிவேன் இதற்கு விடை என்றயர்ந்து கோமதியும்
ஏதேதோ யோசித்தனள்
இடப்பக்கம் இடம் தந்த சிவபெருமானா அன்றி
என் அண்ணன் நாராயணனா
செங்கமல விழியன்னை புன்னை வனத்திலொரு
காலூன்றித் தவம் செய்தனள்
சங்கரன் நாராயணன் இருபேரும் ஒன்றென்றே
சரிபாதியாய் நின்றனன்
மங்கலமாம் இக்காட்சி மனக்குளிர்ந்தாள் ஆவுடைத்தாய்
மங்கையர்கள் போற்றும் ஆடி
மாவிளக்கு பூசையுடன் சங்கரன் கோவில் சென்று
மனமுருக வேண்டி நிற்போம்!
சனி, 31 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)