வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாரி அம்மன் - 10

 நடக்க முடியாமல்  நால்லஎன் கால்கள்
முடக்கிக் கிடத்தும் முதுமை - சடக்கென
என்கால் மரக்காமல் இன்றருள் மாரித்தாய்
உன்னை மறப்பேனோ நான்?
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 காலை 7.30 மணி. தாணாத் தெரு சோலையம்மன்
கோயில் பக்கம்)(இடுகை 17-4-2015 பிற்பகல் 3.31)

பெருமாள் - பெருந்தேவி (புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் கோயில்-11)

பெருமாளென் தந்தை பெருந்தேவி தாயார்
அருந்தமிழில் ஆயிரம்கற் பித்தார் - பெருந்துயரம்
யாதொன்றும் வாராமல் என்னையும் காத்திடுவார்
ஓதிடுவேன் நாமங்கள் ஓர்ந்து!
                                                                          - அரிமா இளங்கண்ணன்
(யாதொன்றும் நேராமல்)- (6-9-2014 காலை 7 மணி.தாணாத் தெருவில்
 நடந்து செல்லும்போது) (இடுகை 17-4-2015 பிற்பகல்3.19)

மாரியன்னை - 9

 நல்ல படியாக  நானிங்கே முன்போல
எல்லாம் அனுபவிக்க ஏற்றருள்வாய் - பல்விதமாய்
உன்புகழை எந்நாளும் ஓதிடும் ஏழையின்
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 அதிகாலை 3.30) (இடுகை 17-4-2015 பிற்பகல் 3.10)

அண்ணல் காந்தி

அரிச்சந்தி ரன்பாதை ஆய்தம் அகிம்சை
தரிப்பதோ நாலுமுழ வேட்டி - இயில்
பொக்கைவாய் கைராட்டைப் பொன்வேள்வி காந்தியார்
மக்கட் பெருந்தலைவ ராம்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(3-9-2014 இரவு 12.30) அமுதசுரபி அக்டோபர் 2014 வெண்பாப் போட்டியில்
3 ஆம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா-1)( இடுகை 17-4-2015 பிற்பகல்
2-58)

திறந்திடுவாய் (புரசை வரதராசப் பெருமாள் கோயில்) -10

பூட்டிக் கிடந்தாலும் பொன்மேனி நெஞ்சத்தில்
நாட்ட முடனுண்டு நன்றாக - கேட்ட
வரமருளும் எம்வரத ராசரே! சற்றே
திறந்திடும் வாயிற் கதவு!
                                                          - அரிமா இளங்கண்ணன்
(1-9-2014 மாலை 7 மணி- கோயில்)(இடுகை 17-4-2015 பகல் 2.47)