வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிங்கமுகி அன்னை ஜெகத்தினைக் காத்திடுவாள்!

கர்ச்சிக்கும் சிங்கத்தின் பிடரிமயிர் சிலிர்ப்படையக்
கால் பூமி உதைத்து நிற்க
கற்றைமுடி வால் எழும்ப இருவிழிகள் தீயுமிழக்
கோறைப்பல் நா சுழலவும்
கர்ப்பமது உலகுடையாள் காற்சிலம்போ எதிரொலிக்கக்
கையில் திரி சூலமேந்தி
கதை வில் வாள் எனுமாயுதம் கண்ணிமைக்க முன் வந்து
கரங்களிலே சுழன்றாடிட

பர்வதமலை போலுயர்ந்து நாகங்கள் குடை பிடிக்கப்
பயங்கரியாய் சிங்கமுகியாய்ப்
பாரதிர நகையொலித்துப் பாவிகளை சம்கரிக்கும்
பராசக்தி கூறானவள்

துர்குணத்தைப் போக்கியருள் பிரத்தியங்கரா தேவி
துடிப்பான மாகாளியாம்
தொண்டர்களும் பெண்டிர்களும் தூயமனத் துடனன்னை
திருவடிகள் பணிந்துய்குவாம்!

(ஒரேநாடு-ஆகஸ்ட்டு ௨0௧0)