அசைகின்ற தண்டையும் அஞ்செஞ் சிலம்புகள்
ஆர்ப்பரித் திடுவோசையும்
ஆணிப்பொன் நவமணிகள் அழகொளிர மெல்லிடையில்
அணிதிகழும் ஒட்டியாணம்
ஒசிந்தவா ரிருகைகள் உயர்த்திடும் போதிலே
ஒலிபெருகு வளைகளாட்டம்
ஒளிவிடும் நவரத்ன மோதிரங் கள்விரலில்
உறவாடும் அரவமாமே
இசையோடு நர்த்தனம் செய்கின்ற ஈசனுக்
கேற்றதோள் அணிகலன்கள்
இலங்கு கழுத்தினில் தரளவடம் செவிக்கணிகள்
ஏற்றமணி மகுடத்துடன்
நிசியிலும் ஒளிவெள்ள மாணிக்க மூக்குத்தி
நினதுபல அணிகளன்றோ
நின்நினைவில் என்கனவில் வந்துநகை புரிகின்ற
வடிவுடை அம்மையருள்வாய்!
(15-2-2012 மாலை 5.45 மணி. அலுவலகம்)
ஆர்ப்பரித் திடுவோசையும்
ஆணிப்பொன் நவமணிகள் அழகொளிர மெல்லிடையில்
அணிதிகழும் ஒட்டியாணம்
ஒசிந்தவா ரிருகைகள் உயர்த்திடும் போதிலே
ஒலிபெருகு வளைகளாட்டம்
ஒளிவிடும் நவரத்ன மோதிரங் கள்விரலில்
உறவாடும் அரவமாமே
இசையோடு நர்த்தனம் செய்கின்ற ஈசனுக்
கேற்றதோள் அணிகலன்கள்
இலங்கு கழுத்தினில் தரளவடம் செவிக்கணிகள்
ஏற்றமணி மகுடத்துடன்
நிசியிலும் ஒளிவெள்ள மாணிக்க மூக்குத்தி
நினதுபல அணிகளன்றோ
நின்நினைவில் என்கனவில் வந்துநகை புரிகின்ற
வடிவுடை அம்மையருள்வாய்!
(15-2-2012 மாலை 5.45 மணி. அலுவலகம்)