சனி, 26 செப்டம்பர், 2015

புரசை வரதராசப் பெருமாள் - 12

இன்று புரட்டாசி ஏற்ற சனிக்கிழமை
என்றும் பெருந்தேவி இன்பமுடன் - நன்றாய்
வரதராசன் சேர்ந்துறைய வற்றா தருளும்
புரசைவாக் கத்திற்குப் போ!
                                                                         - அரிமா இளங்கண்ணன்
(20-9-2014 சனி இரவு 7 மணி - கோயில்) (இடுகை 26-9-2015 சனி மாலை
6 மணி)

ஏமாந்து நிற்கின்றேன் யான்

பாலொழுகும் தேன்தமிழில் பாக்கள் படைத்திடவும்
நூலெழுத வும்வைத்தாய்  நுட்பமுடன் - மாலவனே
மாந்தர்தம் நெஞ்சின் மறைபொருள் ஓராதே
மாந்து நிற் கின்றேன் நான் இன்று!
(ஓராது + ஏமாந்து)             அரிமா இளங்கண்ணன்
(18-9-2014 செவ்வாய் காலை 4.30 மணி. இடுகை 26.9.15 சனி
மாலை 5-55)

மாரித்தாய் - 11

என்னைப் புரிந்துகொன்(டு) என்தேவை தானறிந்து
பொன்னைப்போல் காக்கஇப் பூமியில் - அன்னையே
நீதான்  இருக்கின்றாய் நிச்சயம் இக்துண்மை
வாதாயே என்மாரித் தாய்!
                                                              - அரிமா இளங்கண்ணன்
(16-9-2014 செவ்வாய் காலை 5-40 மணி.)
(இடுகை 26.9.15 சனி மாலை 5.35)

செயலின் விளைவேதான் தீர்ப்பு

அவரை விதைத்தால் அறுவடைவே  றாமோ
எவர்க்கும் வினைப்பயன் ஏலும் - தவறாய்
முயலுறங்க ஆமை முதல்வந் ததுபோல்
செயலின் விளைவேதான் தீர்ப்பு!
                                                                                   - அரிமா இளங்கண்ணன்
(15-9-2014 பகல் 12.55 மணி.திங்கள்  வீடு)
(வெளியானது “உரத்தசிந்தனை” தீபாவளி சிறப்பிதழ்-அக்டோபர் 2014
பக்கம் 59)