ஞாயிறு, 31 ஜனவரி, 2010
சமாதானமே நல்ல தீர்வு!
முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன ஜனவரி இருபத்தொன்பது இரண்டயிரத்துப் பத்துடன் நான் வழக்கறிஞர் பணி தொடங்கி! எவ்வளவோ வழக்குகள்; எப்படியெல்லாமோ தீர்ப்புகள். அவற்றுள் பாதிக்கு மேற்பட்ட பிரச்சினைகளை சமாதானமாகவே தீர்த்திருக்க முடியும். ஏனோ கட்சிக்காரர்கள் நீதி மன்றத்தை அணுகி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகிறார்கள்!
சனி, 2 ஜனவரி, 2010
வரலாற்றில் அண்ணா- நூல் வெளியீடு
இன்று மாலை 6 மணிக்கு நண்பர் வழக்கறிஞர் பின்னலூர் விவேகானந்தன் எழுதிய "வரலாற்றில் அண்ணா " என்னும் நூல் சென்னை பாம்க்ரோவ் ஓட்டலில் முன்னாள் நீதிபதி பு.இரா .கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திரு.இராம.வீரப்பனிடமிருந்து முதல் படியை முன்னாள் நீதிபதி பொன்.பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்து வாழ்த்துரைத்தார். திருவாளர்கள் கயல் தினகரன் ,மீ.அ. வைத்தியலிங்கம் ,கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் ,ஆகியோர் வாழ்த்தினர். நூலகவியல் அறிஞர் ந.ஆவுடையப்பன் வரவேற்புரை நல்கினார். அண்ணாவைப் பற்றிய அறிய பல தகவல்களை அறிய முடிந்தது இந்த விழாவில். அவரது எளிமை , மாற்றாரைப் புண்படுத்தாமல் பேசும் பாங்கு, அரசியல் நாகரிகம் , பேச்சு வன்மை போன்ற நல்ல பல செய்திகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)