வியாழன், 29 மே, 2014

                            நிர்வாகத் திறமை   

   அழுகின்ற குழந்தையது தனைம றந்தே
       அடுத்தநொடி சிரித்துமகிழ் வதனைப் போல
  எழுகின்ற கோபத்தீ பரவா வண்ணம்
        இயல்பான மனநிலைக்குத் திரும்பி வந்தே
  அழகூட்டும் புன்சிரிப்பை முகத்தில் காட்டி
       அருகுள்ளோர் மனமகிழ நடப்போன் எங்கும்
  நுழைந்தெளிதில் வென்றிடுவான் நிருவா கத்தின்
       நுட்பங்கள் பலவுமவன் தேர்வான் தானே !     

(எழுதியது 23.1.2014 காலை 6.40 )                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக