வெள்ளி, 17 டிசம்பர், 2010

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

பல்கலை வித்தகர் பயின்றது சட்டம்
தொல்லைய ரானார் வெள்ளைய ருக்கே
நூல்களைச் செல்வமாய் மதித்த அறிஞர்
கால்கோள் கண்டவர் தொழிற்சங் கத்தில்
சிறைபல சென்றவர் குறைகளை எதிர்த்து
நிறைதரும் பொதுவுடை மையெனும் கருத்தர்
சிந்தனைச் சிற்பிசிங் கார வேலர்
இந்த மண்ணில் பிறந்ததெம் பெருமையே!

(ம.சிங்காரவேலர் 150-ஆவது பிறந்த நாள் 18.2.2009
"செவ்வானம்"-பாமாலை- கவிதைத் தொகுப்பு-மே 2009-
பாவலர் அசோகா சுப்பிரமணியன்,புதுச்சேரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக