அண்ணன் தம்பி அக்காள் தங்கை
கண்ணுக்கினிய கணவன் பெற்றோர்
உற்றார் உறவினர் ஊரார் அயலார்
சுற்றம் நட்பும் சூழ மகிழ்ந்து
கண்ணாய்க் கல்வியைக் கற்றுப் பகிர்ந்து
திண்ணிய நெஞ்சுடன் வாழ்வை அமைத்து
வீட்டையும் நாட்டையும் விளக்கொளி யாக்கும்
நாட்டம் கொண்டவள் பெருந்தகை யாமே!
(18.2.2015 புதன் காலை 11.25)
(இடுகை 28.1.2016 வியாழன் மாலை 5-14)
கண்ணுக்கினிய கணவன் பெற்றோர்
உற்றார் உறவினர் ஊரார் அயலார்
சுற்றம் நட்பும் சூழ மகிழ்ந்து
கண்ணாய்க் கல்வியைக் கற்றுப் பகிர்ந்து
திண்ணிய நெஞ்சுடன் வாழ்வை அமைத்து
வீட்டையும் நாட்டையும் விளக்கொளி யாக்கும்
நாட்டம் கொண்டவள் பெருந்தகை யாமே!
(18.2.2015 புதன் காலை 11.25)
(இடுகை 28.1.2016 வியாழன் மாலை 5-14)