வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஆகா! என்னபொருத்தம்!

பெண்பார்க்கச் சென்றார்கள் சாத கத்தில்
       பெரும்பகுதி பொருந்தவில்லை என்ற பின்னும்
கண்பார்த்துக் காடுகரை வீடு சொத்து
    கணக்கற்ற  நகைநட்டும் உண்டாம் மற்றும்
அண்ணன்மார் அக்காளென் றில்லை மென்றே
    அறிந்தவுடன் 'ஆகாகா!' பொருத்தம் பூத்தும்
திண்ணமாக உள்ளதென்றார் திரும ணத்துத்
.   தேதியையும் உடன்குறித்தார் உலகம் இஃதே!

(14-2-2015.சனி. இரவு 10.40 )
(இடுகை. 23.1.2016.பகல் 1-15)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக