திங்கள், 25 ஜனவரி, 2016

இயற்கை

காடழித்தோம் ஆழக் கடலகழ்ந்தோம் குன்றுடைத்தோம்
கேடுமிக வான்வெளிக்குக் கிட்டவைத்தோம் - பாடின்றி
ஓய்ந்திருக்கும் நல்லியற்கைக்(கு) ஊறுபல செய்திட்டால்
பாய்ந்துவரும் பேரழிவைப் பார்!
(14.2.2015 சனி இரவு 10 மணி)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2015 பக்கம் 63. சரம்49.மலர்9.தொடக்கம் 15.8.1966)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக