வெளிநாட்டு வங்கிகளில் வீணாய்க் கிடந்தே
புழுங்கும் பணத்தைப் புழக்கத் - தெளிவான
திட்டமுடன் செய்தால் தீரும் கடன்தொல்லை
எட்டிவிடும் நல்லிலக்கை நாடு.
(26-11-2014 புதன் காலை 10 மணி. திருத்தம். திட்டத்தோடு ஏகினால். இங்கதனைக் கொண்டுவந்து எல்லோர்க்கும் ஈந்திட்டால்
தங்கமென மின்னிடும் நாடு. ஈந்திட்டால்
எங்கணுமே பொங்கிடுமின் பம்.)
எப்படி யோ சேர்த்தபணம் எங்கோஓர் நாட்டினிலே
குப்பையென வங்கிக்குள் கூடுவதோ - தப்பாமல்
இங்கதனைக் கொண்டுவந்து எல்லோர்க்கும் ஈந்திட்டால்
எங்கணுமே பொங்கிடுமின் பம்.
(காலை மணி 10-10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக