ஞாயிறு, 9 ஜனவரி, 2011

முனைப்பு

ஆட்சி புரியத்தான் ஆசை அதற்குரிய
மாட்சிமைக் காயுழைத்தல் வேண்டுமே - காட்சிக்கோ
யானைபோல் தோன்றி எலிபிடிக்கத் தாவிடும்
பூனைபோல் நிற்பதென் புகல்.

(திருக்குறள் அதிகாரம் 52 இல் பயின்றுவரும் கருவிளங்காய்ச்
சீர்களில் ஒன்றனை நான்காம் சீராகக் கொண்டு எழுதப் பெற்றது
"பன்மலர்" ஜூலை 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக