ஓய்ந்திருக்க நேரமிலை உனதுமுகம் எனதுயிரில்
ஓயாது நிழலாடிடும்
உயரிமயம் சென்னையினுள் வந்ததெனக் கமடேசர்
உடனுறையும் தேவிநீயே
வாஞ்சையுடன் பெண்மணிகள் வாழ்வுமங் கலமாக்கி
வரமருளும் செந்தூரமே
வளையொலிக்கச் சேய்களுடன் அவராடும் போதினில்
வாய்விட்டுச் சிரிக்கின்றவள்
காய்ந்துசரு காகியுடல் உதிர்கின்ற வேளையிலும்
கறந்தபால் ஒத்தகருணை
கடாட்சத்தி னாலுயிரை மீட்டுக் கொடுத்திடும்
கனிவுடை அன்னைநீயே
ஊஞ்சலிலே ஆடியிவண் ஒய்யார மாய்மிளிரும்
ஒப்பற்ற காளிகாம்பாள்
உனதடியில் அனுதினமும் பணிபுரிந்தே எனதுயிரும்
உய்யும்நாள் எந்தநாளோ!
(10-2-2012 வெள்ளிக் கிழமை கோயிலில் அம்மன் ஊஞ்சல் சேவை. எழுதியது மாலை 5.10 மணி. அலுவலகம்)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" 28-ஆம் ஆண்டுவிழா மலர். 25.3.2012)
ஓயாது நிழலாடிடும்
உயரிமயம் சென்னையினுள் வந்ததெனக் கமடேசர்
உடனுறையும் தேவிநீயே
வாஞ்சையுடன் பெண்மணிகள் வாழ்வுமங் கலமாக்கி
வரமருளும் செந்தூரமே
வளையொலிக்கச் சேய்களுடன் அவராடும் போதினில்
வாய்விட்டுச் சிரிக்கின்றவள்
காய்ந்துசரு காகியுடல் உதிர்கின்ற வேளையிலும்
கறந்தபால் ஒத்தகருணை
கடாட்சத்தி னாலுயிரை மீட்டுக் கொடுத்திடும்
கனிவுடை அன்னைநீயே
ஊஞ்சலிலே ஆடியிவண் ஒய்யார மாய்மிளிரும்
ஒப்பற்ற காளிகாம்பாள்
உனதடியில் அனுதினமும் பணிபுரிந்தே எனதுயிரும்
உய்யும்நாள் எந்தநாளோ!
(10-2-2012 வெள்ளிக் கிழமை கோயிலில் அம்மன் ஊஞ்சல் சேவை. எழுதியது மாலை 5.10 மணி. அலுவலகம்)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" 28-ஆம் ஆண்டுவிழா மலர். 25.3.2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக