புதன், 30 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில் -8 நரசிம்மர்

எங்குளன் என்றே இரணியன் இரைந்ததிர
எங்குமுளன் என்றே பாலகன் உரைத்திடப்
பொங்கிவரும் கோபத்தால் தூணை உதைத்திடவும்
செங்கண்மால் சிங்கவுரு தோன்றியதை என்சொல்வேன்.

தூணை உதைத்திடவும் தோன்றிய நற்சிங்கம்
ஆணிபோல் கூர்நகத்தால் இரணியன் உடல்கிழிக்கக்
காணாத காட்சியினால் ஏழுலகும் பிரமிக்க
நீணிலத்தில் நடந்தானை நெஞ்சுருக என்சொல்வேன்.

(21-4-2012 சனிக்கிழமை இரவு 7.30-7.45. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக