வெள்ளி, 18 ஜூலை, 2014

எல்லோரும் வாழ்க இனிது

செய்யாதவை நீக்கிச் சிற்றெறும்புக் கும்கனிவாய்
வெய்யோன் கனல்நீக்கி  ஊர்க்குதவி - மெய்யான
நல்லின்பம் பெற்று நறுமலர்ப்பா தத்தருளால்
எல்லோரும் வாழ்க இனிது.

(4-12-2007  பகல் 12.20 அலுவலகம்)

செய்யா தவைநீக்கிச் சிற்றுயிர்க்கும் அன்புகாட்டி
உய்யும் வகையறிந்து ஊர்க்குதவி - மெய்யான
நல்லின்பம் பெற்று நறுமலர்ப்பா தத்தருளாளால்
எல்லோரும் வாழ்க இனிது.

(4-12-2007 பிற்பகல் 2.40 அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக