வியாழன், 17 ஜூலை, 2014

பண்புடன் வாழப் பழகு

ஒழுக்கத்தை நம்முயிரின் மேலாய் மதித்தே
விழுப்பம் பெறச்சொன்னார் அய்யன் - முழுமதியாய்
கண்ணழகில் மூக்கழகில் கர்வப்ப டாமல்நீ
பண்புடன் வாழப் பழகு.

(23.10.2007 பகல் 12.40 மணி- அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" தி.பி.2038 நவம்பர் 2007 பக்கம் 14)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக