புதன், 30 ஜூலை, 2014

கீரைகள் (வடபழநி முருகேச சதகம்)

நல்ல தூதுவளை காசநோய் நீக்கிடும்
         பிரண்டைக்குடல் புண்ணாற்றிடும்
   நஞ்சுக்கு மருந்தாகும் அகத்திக் கீரைநற்
         கொடிப்பசலை காமமூட்டும்

கொல்லும் இருமல்சளி புகைச்சலைப் போக்கிடும்
         குணமுள்ள முசுமுசுக்கை
   குறையாத மூலநோய் புண்களை ஆற்றிடும்
         கொத்தாகத் துத்திஇலைதான்

மல்லிக்கீ ரைமணத் தக்காளி பசிதூண்டி
         மந்தமும் பித்தமகற்றும்
   முடக்கத்தான் வாதநோய் முற்றிலும் நீக்கிடும்
          முருங்கையுடல் உரமாக்கிடும்

   வல்லா ரைக்கீரை நினைவாற்ற லைத்தூண்டும்
           வானோர்க்குப் பொருள்சொன்னவா
      வடிவேலி னொளியாகத் தடியோடு புகழ்மேவு
            வடபழனி முருகேசனே.

(23-12-2011 அலுவலகம்)

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக