அல்லும் பகலும் உழைத்துச் செல்வம்
அகத்தில் நிரம்பிடினும்
எல்லை இல்லா ஆசைகொண்டோர்
எதையும் பொருட்படுத்தார்
தொல்லை தந்தே மனைவி மக்கள்
துரத்த முனைந்திடுவார்
வெல்லும் அன்பே நிலைத்த செல்வம்
வேறெங் குணர்ந்திடுவார்?
(29-1-2012 இரவு 9.37 மணி. வீடு)
(வெளியானது; "நற்றமிழ்".)
அகத்தில் நிரம்பிடினும்
எல்லை இல்லா ஆசைகொண்டோர்
எதையும் பொருட்படுத்தார்
தொல்லை தந்தே மனைவி மக்கள்
துரத்த முனைந்திடுவார்
வெல்லும் அன்பே நிலைத்த செல்வம்
வேறெங் குணர்ந்திடுவார்?
(29-1-2012 இரவு 9.37 மணி. வீடு)
(வெளியானது; "நற்றமிழ்".)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக