வியாழன், 31 ஜூலை, 2014

அன்பே செல்வம் (அறுசீர் ஆசிரிய மண்டிலம்)

அல்லும் பகலும் உழைத்துச் செல்வம்
      அகத்தில் நிரம்பிடினும்
எல்லை இல்லா ஆசைகொண்டோர்
       எதையும் பொருட்படுத்தார்
தொல்லை தந்தே மனைவி மக்கள்
       துரத்த முனைந்திடுவார்
வெல்லும் அன்பே நிலைத்த செல்வம்
      வேறெங் குணர்ந்திடுவார்?

(29-1-2012 இரவு 9.37 மணி. வீடு)
(வெளியானது; "நற்றமிழ்".)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக