ஞாயிறு, 27 ஜூலை, 2014

மாலையது தந்த வனப்பு

சிட்டுக் குருவியாய்ச் சிற்றோடை யாட்டமிடும்
கட்டழகி தாமரையாய் நாணினாள் - பட்டெழில்
சேலை பளபளக்கச் சிற்றிடைக்(கு) இன்றுமண
மாலையது தந்த வனப்பு!

(18-3-2008 செவ்வாய்  பிற்பகல் 1.50மணி. அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" வெண்பா அரங்கம்-11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக