புதன், 30 ஜூலை, 2014

பொங்கல்

எத்துணையோ பேருழைப்பில் ஏற்றமிகு நல்விளைச்சல்
புத்தரிசி வெல்லம் புதுப்பானை - தித்திக்கச்
செங்கரும்பு மஞ்சளிஞ்சி சீர்மிகவே மாக்கோலம்
பொங்கிடும்தைப் பொங்கல் பொலிந்து.

(28-12-2011 பிற்பகல் 1.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல் மலர்.சனவரி2012 .பக்கம்73)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக