புதன், 30 ஜூலை, 2014

அறுசீர் ஆசிரிய மண்டிலம்

இன்னல் செய்தவ ரெனினும்
   இன்முகம் காட்டிடப் பழகு
துன்பப் படுவதைக் கண்டால்
    துயரது களைந்திட வேண்டும்
அன்பின் திரவியம் பெரிதாம்
      அள்ளிடக் குறைந்திடா தென்றும்
என்றும் அன்பினைப் பெய்தால்
     இறைவன் உன்னுடன் தானே.

(29.11.2011, பிற்பகல் 1.35 மணி. அலுவலகம்)
(வெளியனது 'நற்றமிழ்" புதுச்சேரி. அறுசீர் ஆசிரிய மண்டிலம்-5. வாய்பாடு; குற்றியல் மா+விளம்+விளம்+மா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக