வியாழன், 31 ஜூலை, 2014

பொங்கல்

செங்கதிர் உறைந்திடும் முன்பனிக் காலம்
       சிந்திடும் வாசலில் பூக்களின் கோலம்
தங்கத் தாரகை தைமகள் பிறந்தாள்
       தரணியில் உழவர் பெருமையில் சிறந்தார்
பொங்கிடும் பொங்கல் இளஞ்சுடர்க் காலை
       புதுமைகள் நிறைந்திடும் வாழ்க்கைச் சோலை
எங்கும் மங்கலம் இனிதாய் நிறைகவே
       எங்கள் தமிழர் புவியினில் உயர்கவே!

(13-1-2012 அலுவலகம்)(வெளியானது "இலக்கியச்சோலை" மலர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக