ஞாயிறு, 27 ஜூலை, 2014

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

ஈழத் தமிழர் இரவுபகல் சாகின்றார்
பாழும் இலங்கைப் படையினரால் - யாழ்ப்புலியாய்
ஈண்டெழுந்து போரிடுக எங்கள் சுபவீர
பாண்டியன்போல் மோதிடுக பாய்ந்து!

(26-3-2008 .காலை 9.30.வீடு.-பிரபாகரன் சிங்களத் திரைப்பட மொழிமாற்றம் குறித்து சுபவீ  காலையில் தொலைக்காட்சியில் போர்க்கொடி. அப்போது எழுதி தொலைபேசியில் வாசித்தேன்."வழக்கறிஞரே, வெண்பா ஓட்டம் நன்றாக உள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக