யாதும் சுவடுபடா திருந்தாலு முன்வினைகள்
எகத்தாளம் செய்கின்றன
எல்லோர்க்கும் நல்லவரா யிருப்பதிப் பூவுலகில்
இயலாத காரியந்தான்
கோதையும் காரைக்கா லம்மையும் ஒளவையும்
குணக்குன்றாய் உயர்ந்தமாதர்
குன்றனைய நலந்தள்ளிக் கடுகளவு குறையினைக்
கூறுவர் இன்றுபெண்டிர்
போதும் போதுமிப் புவியினிற் பொய்யர்கள்
புரட்டர்கள் மிகுகின்றனர்
புத்திரரும் பெண்டிரும் சத்துருவாய் வாழ்வினைப்
போர்க்களம் செய்கின்றனர்
வாதும் சூதுமென வகையறியா திவ்வுலகில்
வாழ்ந்துநான் என்செய்குவேன்
"வா'வென் றழைத்துனது மலரடியி லேசேர்ப்பாய்
வடிவுடை அம்மைநீயே!
(14-1-2012 மாலை 4.35 மணி. அலுவலகம்)
எகத்தாளம் செய்கின்றன
எல்லோர்க்கும் நல்லவரா யிருப்பதிப் பூவுலகில்
இயலாத காரியந்தான்
கோதையும் காரைக்கா லம்மையும் ஒளவையும்
குணக்குன்றாய் உயர்ந்தமாதர்
குன்றனைய நலந்தள்ளிக் கடுகளவு குறையினைக்
கூறுவர் இன்றுபெண்டிர்
போதும் போதுமிப் புவியினிற் பொய்யர்கள்
புரட்டர்கள் மிகுகின்றனர்
புத்திரரும் பெண்டிரும் சத்துருவாய் வாழ்வினைப்
போர்க்களம் செய்கின்றனர்
வாதும் சூதுமென வகையறியா திவ்வுலகில்
வாழ்ந்துநான் என்செய்குவேன்
"வா'வென் றழைத்துனது மலரடியி லேசேர்ப்பாய்
வடிவுடை அம்மைநீயே!
(14-1-2012 மாலை 4.35 மணி. அலுவலகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக