சோம பானமது மிகவருந்தி சிரசேரிச்
சொக்கவைத் திடுதலைப்போல்
சுந்தரிகள் உடலழகில் மனமெலாம் வெறிகொண்டு
சுற்றிடும் பித்தர்கூட்டம்
காமனது விளையாடல் எலைமீற சிவனுமே
கண்சிவந் தெரித்திட்டனன்
காகா சுரனுடைய காமக்கண் ஊனமுறக்
காட்டினான் சீராமனும்
இராமனது மனைவியை மோகித்துச் சிறையெடுத்த
இராவணன் புகழ்குன்றினான்
இரக்கமி லாதுதொடை ஏறென்று திரெளபதியை
இகழ்ந்தவன் என்னவானான்
வாமனா யுலகங்க ளளந்தவன் மருகனே
வஞ்சிக்கும் காமமோகம்
வடிவேலி னொளியாகத் தடியோடு புகழ்மேவு
வடபழநி முருகேசனே.
(229-12-2011 காலை 5.30 மணி. வீடு)
சொக்கவைத் திடுதலைப்போல்
சுந்தரிகள் உடலழகில் மனமெலாம் வெறிகொண்டு
சுற்றிடும் பித்தர்கூட்டம்
காமனது விளையாடல் எலைமீற சிவனுமே
கண்சிவந் தெரித்திட்டனன்
காகா சுரனுடைய காமக்கண் ஊனமுறக்
காட்டினான் சீராமனும்
இராமனது மனைவியை மோகித்துச் சிறையெடுத்த
இராவணன் புகழ்குன்றினான்
இரக்கமி லாதுதொடை ஏறென்று திரெளபதியை
இகழ்ந்தவன் என்னவானான்
வாமனா யுலகங்க ளளந்தவன் மருகனே
வஞ்சிக்கும் காமமோகம்
வடிவேலி னொளியாகத் தடியோடு புகழ்மேவு
வடபழநி முருகேசனே.
(229-12-2011 காலை 5.30 மணி. வீடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக