செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இரட்டை வெண்பா (குறள். அதிகாரம் 111)

(திருக்குறள் அதிகாரம் 111-ல் (புணர்ச்சி மகிழ்தல்) உள்ள குறட்பாக்களில் உள்ள ஒரு சீரை முதற் சீராகக் கொண்டு அகமும், கொடையும் மறமும் கூறும் புறமும் வேண்பாவில் பாடவேண்டும்)

                                  அகம்

உலகு வியந்திடும் ஒப்பிலாத் தோற்றம்
குலவும் சிறுகிளிக் கொஞ்சல் - நிலவும்
பொறையினாள் மென்தோள் புணர்ச்சி மகிழ்தல்
இறையுல குக்கே இணை.

                                   புறம்

உலகு புரந்திடும் உத்தமன் வீரம்
இலகு பெரும்படை ஏந்தல் - நிலவின்
குளிர்ச்சியாய் ஆளும் கொடையிற் சிறந்தோன்
உளத்தினில் மக்கட் கிறை

(14-2-2014 னண்பகல் 12.30 மணி)
(வெளியானது "பன்மலர்" மார்ச்சு 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக