வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மனம் தளராதே

மதயானை போன்றதொரு வேகத்தி லிரவுபகல்
             மாடாக உழைத்திட்டனை
    மக்களும் அன்பொழுகும் மனைவியும் பக்கத்தில்
             மெச்சவாழ்ந் திடஎண்ணினாய்

விதியதோ வலியதுன் குடும்பத்தி லுள்ளவருன்
           உழைப்பினை உறிஞ்சிட்டனர்
    உனக்கென்றே எதனையும் சேமித்தி டாமலே
           வீடுவீ  டென்றலைந்தாய்

புதுவாழ்வு மாடிமனை பெண்டாட்டி பிள்ளைகள்
           போம்வழியில் காணவில்லை
     பொய்யான உலகத்தை மெய்யாக நம்பியே
            பொருளெலாம் இழந்திட்டனை

இதுதான் உலகமென் றறிந்துகொள் நண்பனே
             ஏன்கவலை கொள்கின்றனை
      இருப்பதைக் கொண்டுமன வலிமையுடன் நன்றாக
             ஏற்றமுடன் வாழ்ந்திடுகநீ!

(27-2-2012 மாலை 6.50 மணி. அலுவலகம்)


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக