மதயானை போன்றதொரு வேகத்தி லிரவுபகல்
மாடாக உழைத்திட்டனை
மக்களும் அன்பொழுகும் மனைவியும் பக்கத்தில்
மெச்சவாழ்ந் திடஎண்ணினாய்
விதியதோ வலியதுன் குடும்பத்தி லுள்ளவருன்
உழைப்பினை உறிஞ்சிட்டனர்
உனக்கென்றே எதனையும் சேமித்தி டாமலே
வீடுவீ டென்றலைந்தாய்
புதுவாழ்வு மாடிமனை பெண்டாட்டி பிள்ளைகள்
போம்வழியில் காணவில்லை
பொய்யான உலகத்தை மெய்யாக நம்பியே
பொருளெலாம் இழந்திட்டனை
இதுதான் உலகமென் றறிந்துகொள் நண்பனே
ஏன்கவலை கொள்கின்றனை
இருப்பதைக் கொண்டுமன வலிமையுடன் நன்றாக
ஏற்றமுடன் வாழ்ந்திடுகநீ!
(27-2-2012 மாலை 6.50 மணி. அலுவலகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக