கையிரண்டு பெற்றதெலாம் உழைப்ப தற்கே
கண்ணிரண்டு பெற்றதருள் காட்டு தற்கே
பைநிறையச் சேர்த்தபணம் ஏழை யர்தம்
பசிப்பிணியைப் போக்குதற்கே உதவ வேண்டும்
உய்வதற்கு நீயளிக்கும் தானம் எல்லாம்
ஒப்பற்ற கடவுளுக்கே முதலில் சேரும்
ஐயிரண்டு திங்களிலே உன்னைப் பெற்றாள்
ஆனந்தம் கொள்ளும்நற் செயலே தர்மம்!
- அரிமா இளங்கண்ணன்
( வெளியானது: "புதிய உறவு"-புதுச்சேரி-2014 மார்ச். பக்கம்.19 )
கண்ணிரண்டு பெற்றதருள் காட்டு தற்கே
பைநிறையச் சேர்த்தபணம் ஏழை யர்தம்
பசிப்பிணியைப் போக்குதற்கே உதவ வேண்டும்
உய்வதற்கு நீயளிக்கும் தானம் எல்லாம்
ஒப்பற்ற கடவுளுக்கே முதலில் சேரும்
ஐயிரண்டு திங்களிலே உன்னைப் பெற்றாள்
ஆனந்தம் கொள்ளும்நற் செயலே தர்மம்!
- அரிமா இளங்கண்ணன்
( வெளியானது: "புதிய உறவு"-புதுச்சேரி-2014 மார்ச். பக்கம்.19 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக