வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தானம்

கையிரண்டு பெற்றதெலாம் உழைப்ப தற்கே
       கண்ணிரண்டு பெற்றதருள் காட்டு தற்கே
பைநிறையச் சேர்த்தபணம் ஏழை யர்தம்
      பசிப்பிணியைப் போக்குதற்கே உதவ வேண்டும்
உய்வதற்கு நீயளிக்கும் தானம் எல்லாம்
     ஒப்பற்ற கடவுளுக்கே முதலில் சேரும்
ஐயிரண்டு திங்களிலே உன்னைப் பெற்றாள்
      ஆனந்தம் கொள்ளும்நற் செயலே தர்மம்!

                                                 - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதிய உறவு"-புதுச்சேரி-2014 மார்ச். பக்கம்.19 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக