உலகத்தில் ஒப்பற்ற தலைவரோர் ஆயிரம்
ஆண்டினில் அவதரிப்பார்
உண்மையும் எளிமையும் மனிதநல் நேயமும்
உற்றகுண மாய்த்தோன்றுவார்
சிலகாலம் ஆண்டாலும் நாட்டுமுன் னேற்றத்தை
சிரசிலே மேற்கொள்ளுவார்
செய்கின்ற தியாகமோ கணக்கிலடங் காதவர்
சிறந்தநற் கருமவீரர்
நிலையான புகழுடைய விருதுநக ரில்பிறந்த
சிவகாமி யம்மைமகனே
நிர்க்கதியா யுழன்றமிக தாழ்த்தப்பட் டோர்களின்
ஏழைப்பங் காளரானார்
அலையாத மனதுடன் ஆசைகள் இல்லாமல்
அருந்தமிழ் நாட்டையாண்டார்
அதுபெரிய பொற்காலம் என்றெவரும் போற்றிடும்
அவரேநம் காமராசர்!
- அரிமா இளங்கண்ணன்
(14-7-2013 ஞாயிறு இரவு 7.45. வீடு)
(15-7-13 காமராசர் பிறந்த நாள் விழா
முகப்பேறு அமுதா மேல்நிலைப் பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவாற்றும்போது வாசித்த கவிதை.)
ஆண்டினில் அவதரிப்பார்
உண்மையும் எளிமையும் மனிதநல் நேயமும்
உற்றகுண மாய்த்தோன்றுவார்
சிலகாலம் ஆண்டாலும் நாட்டுமுன் னேற்றத்தை
சிரசிலே மேற்கொள்ளுவார்
செய்கின்ற தியாகமோ கணக்கிலடங் காதவர்
சிறந்தநற் கருமவீரர்
நிலையான புகழுடைய விருதுநக ரில்பிறந்த
சிவகாமி யம்மைமகனே
நிர்க்கதியா யுழன்றமிக தாழ்த்தப்பட் டோர்களின்
ஏழைப்பங் காளரானார்
அலையாத மனதுடன் ஆசைகள் இல்லாமல்
அருந்தமிழ் நாட்டையாண்டார்
அதுபெரிய பொற்காலம் என்றெவரும் போற்றிடும்
அவரேநம் காமராசர்!
- அரிமா இளங்கண்ணன்
(14-7-2013 ஞாயிறு இரவு 7.45. வீடு)
(15-7-13 காமராசர் பிறந்த நாள் விழா
முகப்பேறு அமுதா மேல்நிலைப் பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவாற்றும்போது வாசித்த கவிதை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக