சனி, 23 ஆகஸ்ட், 2014

காமராசர்

உலகத்தில் ஒப்பற்ற தலைவரோர் ஆயிரம்
           ஆண்டினில் அவதரிப்பார்
   உண்மையும் எளிமையும் மனிதநல் நேயமும்
           உற்றகுண மாய்த்தோன்றுவார்

சிலகாலம் ஆண்டாலும்  நாட்டுமுன் னேற்றத்தை
          சிரசிலே மேற்கொள்ளுவார்
   செய்கின்ற தியாகமோ கணக்கிலடங் காதவர்
          சிறந்தநற் கருமவீரர்

நிலையான புகழுடைய விருதுநக ரில்பிறந்த
         சிவகாமி யம்மைமகனே
   நிர்க்கதியா யுழன்றமிக தாழ்த்தப்பட் டோர்களின்
         ஏழைப்பங் காளரானார்

அலையாத மனதுடன் ஆசைகள் இல்லாமல்
         அருந்தமிழ் நாட்டையாண்டார்
   அதுபெரிய பொற்காலம் என்றெவரும் போற்றிடும்
         அவரேநம் காமராசர்!

                                                   - அரிமா இளங்கண்ணன்

(14-7-2013 ஞாயிறு இரவு 7.45. வீடு)
(15-7-13 காமராசர் பிறந்த நாள் விழா
முகப்பேறு அமுதா மேல்நிலைப் பள்ளியில் சிறப்புச்  சொற்பொழிவாற்றும்போது வாசித்த கவிதை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக