வியாழன், 7 ஆகஸ்ட், 2014

என்ன சிந்தனை? - (ஒளிப்படக் கவிதை)

பாடம் நன்றாய்ப் படிக்கவோ
        பள்ளியில் முதலாய் நிற்கவோ
ஆடல் பாடல் சிறக்கவோ
        அரிய சொற்பொழி வாற்றவோ
ஓடிப் பரிசை வெல்லவோ
        உயரே வானில் பறக்கவோ
நாடே உன்னைப் போற்றவோ
        நயந்த சிந்தனை எதுவாமோ?

                                                       -அரிமா இளங்கணன்

(13-4-2014-மாலை 5.50 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக