ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏன் படைத்தேன் ?

எதுவேண்டும் என்றிந்த மானு டத்தை
     இறைவாநீ படைத்திட்டாய் என்றே என்னை
மெதுவாக வினவுகின்ற மனிதா  கேளாய்
    மேதினியில் உத்தமனாய் மனிதன் தோன்றி
அதிசயிக்கும் அறிவுமிக தயையும் கூடி
    அறத்தாலே சேர்த்தபொருள் அனைத்தும் ஈந்தே
எதுவரினும் மாறாநல் மனத்தா னாகி
     எனைபோன்ற இறையெனநான் உயர்த்து தற்கே!

                                                          - அரிமா இளங்கண்ணன்

(16-1-14 இரவு 7.50 மணி, வீடு. "கவிதை உறவு" இதழில்
 ஆசிரியர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியதற்கு
மறுமொழியாக எழுந்த கவிதை.)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக