திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சிவன் - விநாயகர்

வேகபுரம் தான்சிரித்து விண்ணோர் மகிழ்வடைய
நாகுபதி யாய்நின்ற நாயகமே - ஆகுபதி
உன்மூத்த் பிள்ளையான் உற்றிடும் துன்பங்கள்
ஒன்றுமிலா தாக்கிடச் சொல்.

வேகபுரம் =திரிபுரம் எரிந்து வேக; நாகுபதி-பசுபதி; சிவன்; ஆகுபதி=பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட பிள்ளையார்

(21-1-2014 இரவு 7.40 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக