திங்கள், 4 ஆகஸ்ட், 2014

'அன்பு' எனத் தொடங்கி 'அறம்' என முடியும் வெண்பா(3-ஆம் நிலை)

அன்பாய் நடத்தல்நல் லாதரவாய்ப் பேசிடுதல்
துன்பம் வருங்கால் துயர்துடைத்தல் - மண்ணுலகில்
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணிடுதல் மூத்தோரை
செவ்வையாய்க் காத்தல் அறம்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2013 பக்கம் 53. மூன்றாம் நிலையில் தேர்வு-1)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக