திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஈற்றடி தானே இனிப்பு (2-ஆம் பரிசு)

ஆவலுடன் பாவலர்கள் அற்புதமாய் வெண்பாவில்
யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு
மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும்
ஈற்றடி தானே இனிப்பு!

(எழுதியது 31-5-2014 பிற்பகல் 2.35 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2014.  பக்கம்.56-இரண்டாம் பரிசு பெற்றது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக