வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கல்லுக்குள் ஈரம்

கல்லடி பட்ட நாய்க்குட்டி
  கண்டான் கசாப்புக் கடைக்காரன்
செல்லமாய் எடுத்தே அணைத்திட்டான்
  சிவப்பாய் ரத்தம் கைகளிலே
மெல்லக் கண்ட நாய்க்குட்டி
  மெதுவாய்க் கைகளை நக்கித்தன்
சொல்ல இயலா நன்றியினைச்
  சுகமாய் உணர்த்தி மகிழ்ந்ததுவாம்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
( கவிஞர் மீ.விசுவநாதன். சந்தவசந்ததில் எழுதிய வசன கவிதையின்
 மரபுக் கவிதை.13-8-2014 நண்பகல் 12 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக