சனி, 2 ஆகஸ்ட், 2014

நீதி தவறாமல் நில்

பொய்ச்சாட்சி சொல்லல் புறந்தள்ளல் வேண்டாரை
'பை'நிறைந்த பின்னரே தீர்ப்புறைத்தல் - அய்யகோ
போதனைகள் செய்யாது பொற்கைத்தென் பாண்டியன்போல்
நீதி தவறாமல் நில்.

(26-7-2012 வியாழன். இரவு 9.50 வீடு.-புத்தரைபோல் என்றுமே எனவும் எழுதலாம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஆகஸ்ட் 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக