புதன், 6 ஆகஸ்ட், 2014

இரட்டை வெண்பா (குறள்.அதிகாரம் 112)

திருக்குறள் அதிகாரம் 112-நலம் புனைந்துரைத்தல்-இல் இடம்பெறும் முதற்சீர்-அகமும். உழவின் பெருமை குறித்துப் புறமும்-இரண்டு வெண்பாக்களும் ஒரே வகையான தளை பெற்றிருத்தல் )

                                 அகம்
அன்னத்தினதூவி அடிக்கூறாம் மாங்கனி
கன்னத்தைக் கண்டே கவன்றிடும் - மின்னல்
கொடியிடைமேல் பாரம் குலைத்தெங்கு நாணும்
நடமயிலாள் மண்ணில் மதி.

                               புறம்
அன்னத்தின் மாண்பை அறிவாய்நீ ஏருடன்
முன்னம்தாம் சென்றே முனைபவர் - செந்நெல்
பெருவிளைச்சல் கண்டு பெருவானைப் போற்றும்
எருதுழவர் தம்மை மதி.

(10-3-2014 காலை 9.25 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" ஏப்ரல் 2014 பக்கம்15)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக