திரைகடல் வழங்கிடும் சங்கொலி முழங்கிட
தேவர்கள் இசைபாட
தித்தித் தோம்தம் தம்தம் எனமத்
தள இசை நந்திதர
தரையினில் அடிபர வாதது போல்மணிச்
சதங்கைகள் துதிபாடத்
தகதக வெனுமொளி விரிசடை பரப்பிடத்
தாவிக் குதித்தாடி
இருகரம் இணைந்துபி ரிந்துவி ரல்களில்
எழும்பிடும் முத்திரைகள்
இப்புவிபேசிடும் அத்துணை மொழிகளும்
இயம்பிடும் மலர்விழிகள்
அரனுடன் உமையவள் அபிநய சுந்தரி
ஆடிடும் எழிற்கோலம்
அடியவர் மனந்தனை ஆனந்த வாரியில்
ஆழ்த்திடும் தாண்டவமே!
- அரிமா இளங்கண்ணன்
(14-3-2012 காலை 4.40 வீடு. நிறைவு மாலை 5.47.LC 407)
தேவர்கள் இசைபாட
தித்தித் தோம்தம் தம்தம் எனமத்
தள இசை நந்திதர
தரையினில் அடிபர வாதது போல்மணிச்
சதங்கைகள் துதிபாடத்
தகதக வெனுமொளி விரிசடை பரப்பிடத்
தாவிக் குதித்தாடி
இருகரம் இணைந்துபி ரிந்துவி ரல்களில்
எழும்பிடும் முத்திரைகள்
இப்புவிபேசிடும் அத்துணை மொழிகளும்
இயம்பிடும் மலர்விழிகள்
அரனுடன் உமையவள் அபிநய சுந்தரி
ஆடிடும் எழிற்கோலம்
அடியவர் மனந்தனை ஆனந்த வாரியில்
ஆழ்த்திடும் தாண்டவமே!
- அரிமா இளங்கண்ணன்
(14-3-2012 காலை 4.40 வீடு. நிறைவு மாலை 5.47.LC 407)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக