வியாழன், 7 ஆகஸ்ட், 2014

இரட்டை வெண்பா - (காதற் சிறப்புரைத்தல்)

திருக்குறளில் காதற் சிறப்புரைத்தல் அதிகாரப் பொருளும் , ஏதேனும் ஒரு சீரை இறுதிச் சீராகவும் அகமும், நட்பு பற்றிப் புறமும் அமைந்த இரட்டை வெண்பா.
                                      அகம்
பாலோடு தேன்கலந்த பாங்கான செஞ்சொல்லும்
சேல்விழியும் கொண்ட சிறுநகையாள் - கோல
விளக்கென என்மனக் கோவில்தான் கொள்ளல்
வளைக்கரத் தாள்தன் குணம்.
                                      புறம்
ஒன்றாகத் தின்றுவிட்டே ஊர்சுற்றி நற்பண்பைக்
குன்றிடவே செய்வர் கெடுமதியர் - என்றும்
நிறைகளைப் போற்றியும் நேரல்ல மாற்றக்
குறைசொலல் நண்பர் குணம்.

(9-4-2014 இரவு 9.50 மணி)
(வெளியானது "பன்மலர்"  மே 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக