எமதினிய நற்பேறி தெவர்க்கிவண் வாய்க்குமென
எல்லோரும் மகிழுகின்றோம்
எங்களன் புத்தலைவ ராகவே விளங்கிடும்
இலகணேச னார்பிறந்தநாள்
தமதுநலன் எதனையுங் கருதாம லினியபொற்
றாமரையை வழிநடத்தியே
தன்னுடன் பிறப்பாக எம்மையும் மதித்திடும்
தங்கமனத் தார்வாழ்கவே
இமயமுதல் குமரிவரை ஒரேநா டெனமுழங்கி
ஏற்றவொரு கொள்கைதனில்
இம்மியள வும்பிசகி டாதயிக் கர்மயோகி
எண்ணியவா றினிதுவாழ்க
கமலா லயந்தன்னி லெழுந்தருளு மீசனார்
கருணாம்பி கையுமையுடன்
கணபதியும் வேலவனு மெங்களில கணேசனார்க்
கருள்புரிய வாழ்க வாழ்க!
(16-2-2014 அன்று 69-ஆவது பிறந்தநாள்-நேரில் வாசித்துக் கொடுத்தது)
எல்லோரும் மகிழுகின்றோம்
எங்களன் புத்தலைவ ராகவே விளங்கிடும்
இலகணேச னார்பிறந்தநாள்
தமதுநலன் எதனையுங் கருதாம லினியபொற்
றாமரையை வழிநடத்தியே
தன்னுடன் பிறப்பாக எம்மையும் மதித்திடும்
தங்கமனத் தார்வாழ்கவே
இமயமுதல் குமரிவரை ஒரேநா டெனமுழங்கி
ஏற்றவொரு கொள்கைதனில்
இம்மியள வும்பிசகி டாதயிக் கர்மயோகி
எண்ணியவா றினிதுவாழ்க
கமலா லயந்தன்னி லெழுந்தருளு மீசனார்
கருணாம்பி கையுமையுடன்
கணபதியும் வேலவனு மெங்களில கணேசனார்க்
கருள்புரிய வாழ்க வாழ்க!
(16-2-2014 அன்று 69-ஆவது பிறந்தநாள்-நேரில் வாசித்துக் கொடுத்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக