சனி, 12 ஜூலை, 2014

பழனி இளங்கம்பனின் "புதுத் தமிழ்ப் பூக்கள்"

மதுகரம் நல்வாய் மடுக்கும்
   மல்லிகை முல்லை போன்ற
"புதுத்தமிழ்ப் பூக்கள்" நூறு
   பொன்போல் கோத்து வைத்து
'பொதுமறைப் புகழ்மா லைகள்'
  புலமைவல் இளங்கம் பன் தான்
இதமுடன் தமிழுக் கீந்தான்
  இன்சுவைப் பாக்க ளாலே!

(எழுதியது 7-8-2007. இரவு 8 மணி. வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக