திங்கள், 14 ஜூலை, 2014

"செந்தாமரை" விருது பெற்ற பாட்டு

எந்திரப் பதுமை இயங்குது நன்றாய்
மந்திரச் சொல்போல் சொன்னதைச் செய்யுது
தொந்தர வேதும் அதனால் இல்லை
வந்திடும் விரைவில் நம்வீ டுகளில்!

(வெளியானது "நம் உரத்தசிந்தனை" செப்டம்பர் 2007. பக்கம் 21)
(உரத்தசிந்தனை வெள்ளிவிழா தொடக்கம்  27-1-2007. பலகலைச் செலவர் இரமணின் ஓவியங்களுக்குக் கடந்த ஓராண்டில் உரத்தசிந்தனையில் பரிசு பெற்ற பாடல்களில் சிறந்தது எனத்தேர்வு பெற்று "செந்தாமரை" விருது பெற்றது- ஓவியப்பாட்டுப் போட்டி-21 க்கு நான் எழுதியது. விழா நடைபெற்ற அரங்கம் மயிலை ஆர்.கே.சாமி ஹால். காலை 10.25 மணி. முன்னாள் நீதியரசர் ஜெகதீசன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக