திங்கள், 14 ஜூலை, 2014

பெரியாரால் நாம் பெற்ற பேறு

சமமாய் அமர்ந்திருத்தல் சாதி மறுத்தல்
நமதே பணியொதுக் கீடு - அமையும்
திருமணம் தன்மதிப்பாம் தீண்டாமை வீழ்ச்சி
பெரியாரால் நாம்பெற்ற பேறு.

(27-8-2007 பகல் 12.15 மணி)
(வெளியானது; "மீண்டும் கவிக்கொண்டல்"  செப்டம்பர் 2007)

அவையில் சமமாய் அமர்ந்திடுதல் கல்விச்
சுவையை எல்லோரும் கொள்ளல் - உவப்பாய்ப்
பெரும்பணியில் நம்மோர்க்கே முன்னுரிமை பாங்காய்ப்
பெரியாரால் நாம்பெற்ற பேறு.
(27-8-2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக